Friday, May 22, 2009

இலங்கையில் இவ்வளவு கோரம், காரணம் ராசீவா? பிரபாகரனா?


இலங்கையில் இவ்வளவு கோரம், காரணம் ராசீவா? பிரபாகரனா?
நான் 7வது படிக்கும் வயதில் பிரபாகரன் எனது கனவு நாயகன், விடுதலை புலிகளுக்கு நாகூரிலிருந்து நாகப்பட்டினம் உதவி ஆட்சியர் அலுவலகம் வரை பள்ளிமாணவர்களோடு உண்டியல் குலுக்கினேன்! மறக்க முடியாது!!
விசயத்துக்கு வருவோம்!

ராசீவ் எடுத்தது ஒரு அரசியல் முடிவு.

அதில் தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக தண்டிப்பீர்களா?

அப்படி பார்த்தால் மாற்று கருத்துகள் உடைய எல்லா தமிழ் தலைவர்களையும் கொலை செய்த பிரபாகரனுக்கு என்ன தண்டனை?

ஆயுதம் தூக்கி போராடினால் இழப்புகள் அதிகமாக இருக்கும், அவர்களுக்கும், அவர்களை ஆதரித்த மக்களுக்கும்! ஏற்று கொள்ள வேண்டும்!

ஆயுதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று வந்து விட்டு இழப்புகளுக்கு அஞ்சுவதா?

எல்லை தாண்டிய பயங்கரவாத்தை ஈழ தமிழன் கண்டித்திருக்க வேண்டாமா?

தவறான பாதைக்கு போனதல்லாமல்,
அந்த மக்களுக்கு தன்னை ஆதரிப்பதை தவிர வேறு வழி இல்லாமல் வைத்த பிரபாகரனே இவ்வளவு குழந்தைகள், பெண்கள் எல்லோருடைய சாவுக்கும் காரணம்!
பொதுமக்களை பிணை வைப்பவன் (குழந்தைகள், பெண்கள் உட்பட!)
மணிதனா? நல்ல தலைவனா?
நானாக இருந்திருந்தால், அந்த நிலை வந்ததுமே எங்கள் ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று போரை நிறுத்திவிட்டு, என் நெற்றியல் துப்பாக்கியை ஏந்தியிருப்பேன்!
அரசியல் ரீதியாக 30 வருடங்கள் போராடியிருந்தால் இந்நேரம் விடிந்திருக்கும்!

Thursday, May 14, 2009

பார்ப்பணர்களை குறை கூறத்தேவையில்லை!

பார்ப்பணர்களை குறை கூறத்தேவையில்லை, தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? காங்கிரஸின் ஆட்சி முடிந்து, (பார்ப்பணர்களின் ஆட்சி முடிந்து?)
திராவிடர்களின் பொற்காலம் மலர்ந்து 40 திரு ஆண்டுகள் முடிந்து விட்டது,
என்ன நிலைமை இப்பொழுது...??
நமது ஆட்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயம்
(இந்த வேலை நடக்கணும்ணா இவ்ளோ ஆகும்களே, கூசாமல், கால்மேல் கால் போட்டுகொண்டு நம்ம ஆளுங்க பேசும்போது, அட டா...)
செய்ததுதான் சாதனை!
வரிசையாக ஒரு குடும்பத்தை ராஜ குடும்பமாக்கி அவர்களிடம் ஏமாந்ததுதான் நம்ம சாதனை! தயாநிதிமாறன் ஓரு ஐபிஎஸ் அதிகாரியால் சுனாமி நேரத்தில் நாகப்பட்டினத்தில் சிறிதளவே தொடப்பட்டதற்கு, சரியான ஒரு அறை வாங்கினார். நானே பார்த்தது! (அறைவாங்கியது போலிஸ் உயர் அதிகாரி!)
பதவியும் காசும் இருந்தால் தாழ்ந்த சாதியும் இப்படித்தான் இருப்பார்கள்,
எல்லா ஊரிலும் சாதிச்சண்டைகள் நமக்குள்ளேயேதான், பார்ப்பணர்களோடு இல்லை,
பார்ப்பண எதிர்ப்பை ஒதுக்கி விட்டு நமக்குள் இருக்கும் குறைகளை பற்றி விவாதித்து மேன்மை அடைவோம்!

கவிதாவின் இந்த பதிவை பார்த்து, எழுதிய பதிவு இது!
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/05/blog-post_2854.html

Friday, March 20, 2009

அண்ணாச்சிக்கு ஆயுள் தண்டனையா? அநியாயம்...!



போயும் போயும் ஒரே ஒரு கொலை, இதுக்கா ஆயுள் தண்டனை?
அதுவும் அண்ணாச்சிக்கா?
என்ன நடக்குது தமிழ் நாட்டுல...?
சட்டம் ஒழுங்கு இருக்கிறதா இன்னும்? வக்கீல்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
அடக்கடவுளே...? பணக்காரனுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டதா?
3 கல்யாணம்? ஒரே ஒரு கொலை?
அநியாயம், அண்ணாச்சி பணத்த மட்டும் சம்பாதித்து வைத்திருக்கிறார் போல, ஓரு கவுன்சிலரா கூட ஆகியிருக்க கூடாதா?
இவ்ளோ பணத்துக்கு எத்தனை ஜீவஜோதி கிடைக்கும், வயித்தெரிச்சல் பா.....!
சட்டம் ஒழுங்கு கெட்டுபோச்சுன்னு கத்துறவுங்களுக்கு தி.மு.க இதை ஒரு சாதனையாகவே சொல்லலாமே...!

Tuesday, March 10, 2009

உங்கள் ஓட்டு யாருக்கு...?

கூட்டணி எல்லாம் மறந்து விடுங்கள்,
உங்கள் ஓட்டு யாருக்கு என்று ஒரு வார்த்தையில் பின்னூட்டம் இடுங்களேன்...!

Sunday, March 8, 2009

உலகத்தின் கடைசி அடிமை இனம் தமிழினம், நெஞ்சு கொதிக்கிறதே....!




திராவிட கட்சிகளின் கொள்கை கொள்ளை அடிப்பது, அந்த ஐந்து வருட குத்தைகையை யாருக்கு அளிப்பது என்பதற்காக தேர்தல் ஆணையம் ஒரு தேதியையும் அறிவித்து உள்ளது.

- நாம் செய்ய வேண்டியது எல்லாம்,

அன்பு மணிக்கு, கனிமொழிக்கு, தயாநிதிக்கு இந்த தடவை எந்த இலாகவை சண்டை போட்டு வாங்குவார்கள் என்று வயிறெரியாமல் அவர்களுக்கே ஓட்டு போட்டு விடலாம், ரத்த கொதிப்பிலிருந்து விடுதலை!

இல்லை,
ராஜ குடும்பத்துக்கு அடிமையாக விருப்பம் இல்லை என்றால் மேற்கொண்டு இதை படிக்கலாம், கொஞ்சமாவது சிந்திக்கலாம்...!

விஜயகாந்த், யாருடனும் கூட்டனி வைக்கவில்லை என்றால் மட்டுமே அவருக்கு விழும் வாக்குகள் வளரும் அல்லது தொடரும், எங்கு கூட்டனி வைத்தாலும் அந்த கூட்டணிக்கு அவரால் வாக்குகள் கூடாது!

இலங்கை தமிழர்கள் விடயத்தில் உறங்கி கொண்டிருக்கும் திராவிட கட்சிகளை கண்டிக்க, தண்டிக்க இந்த விடயத்தில் ஆர்வம் கொள்ள ஆரம்பித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியை தனியாக நின்றாலும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும்!
தமிழகத்தை சேரந்த இ.ல.கணேசன் இந்த விடயத்தை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக அணுகி வருகிறார்!
தமிழர்கள் புதிய பாதையை ஆரம்பிக்க வேண்டிய தருணமாக இந்த தேர்தலை கருத வேண்டும்!
தேசிய அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் தேசிய கட்சியை நேரடியாக ஆதரிப்பது நல்லது. எந்த ஒரு மாநில கட்சியும் இதை கொள்ளை அடிக்கும் வாய்ப்பாகவே கருதுகிறது என்பது கண்கூடு!


தமிழர்களை மதிப்பதில்லை என்று முடிவெடுத்து விட்ட காங்கிரசை, காங்கிரஸ்காரணை தமிழ் மண்ணிலிருந்து விரட்டுவோம்!

தங்களது கருத்துக்கள் எதாயினும் பதிக!

Wednesday, February 25, 2009

ஈழம் கூழம்-னுகிட்டு! .....த்தூ....!



கருணாநிதி-யின் குடும்பம் செய்வது அரசியல் வியாபாரம்,
முதலீடு, தமிழும், மடப்பய தமிழனும்தான்! (முக்கியமாக, ஈழ தமிழன்!)
வியாபாரம் படுக்கும்போது மட்டுமே இந்த இரண்டும் தேவை!
இப்போது வியாபாரம் மாநிலம் மற்றும் அகில இந்திய அளவில் கணஜோராக நடந்து கொண்டிருக்கிறது,

அவரே மண்டலம் மண்டலமா சொத்தை எப்படி பிரிச்சு கொடுக்கறதுன்னு மண்டைய பிச்சிகிட்டு இருக்காரு, அதுக்கு உதவி செய்யாம... (படத்த பாருங்க, அப்பதான் கஷ்டம் புரியும் உங்களுக்கு!)

இடையில் ஈழம் கூழம்-னுகிட்டு! ....த்தூ....!

போங்கப்பா வேலைய பாத்துகிட்டு,
சும்மா கலைஞர் கலைஞர்னுகிட்டு!

Tuesday, February 24, 2009

பின்னூட்டம் தேவை...!

ஒருவார்த்தையிலாவது பின்னூட்டம் இடுங்கள்,
படித்தேன், accepted, not accepted, read, not nice இப்படி ஏதாவது!

ஒருவார்த்தையிலாவது பின்னூட்டம் இடுங்கள்,
படித்தேன், accepted, not accepted, read, not nice இப்படி ஏதாவது!