Friday, May 22, 2009
இலங்கையில் இவ்வளவு கோரம், காரணம் ராசீவா? பிரபாகரனா?
இலங்கையில் இவ்வளவு கோரம், காரணம் ராசீவா? பிரபாகரனா?
நான் 7வது படிக்கும் வயதில் பிரபாகரன் எனது கனவு நாயகன், விடுதலை புலிகளுக்கு நாகூரிலிருந்து நாகப்பட்டினம் உதவி ஆட்சியர் அலுவலகம் வரை பள்ளிமாணவர்களோடு உண்டியல் குலுக்கினேன்! மறக்க முடியாது!!
விசயத்துக்கு வருவோம்!
ராசீவ் எடுத்தது ஒரு அரசியல் முடிவு.
அதில் தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக தண்டிப்பீர்களா?
அப்படி பார்த்தால் மாற்று கருத்துகள் உடைய எல்லா தமிழ் தலைவர்களையும் கொலை செய்த பிரபாகரனுக்கு என்ன தண்டனை?
ஆயுதம் தூக்கி போராடினால் இழப்புகள் அதிகமாக இருக்கும், அவர்களுக்கும், அவர்களை ஆதரித்த மக்களுக்கும்! ஏற்று கொள்ள வேண்டும்!
ஆயுதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று வந்து விட்டு இழப்புகளுக்கு அஞ்சுவதா?
எல்லை தாண்டிய பயங்கரவாத்தை ஈழ தமிழன் கண்டித்திருக்க வேண்டாமா?
தவறான பாதைக்கு போனதல்லாமல்,
அந்த மக்களுக்கு தன்னை ஆதரிப்பதை தவிர வேறு வழி இல்லாமல் வைத்த பிரபாகரனே இவ்வளவு குழந்தைகள், பெண்கள் எல்லோருடைய சாவுக்கும் காரணம்!
பொதுமக்களை பிணை வைப்பவன் (குழந்தைகள், பெண்கள் உட்பட!)
மணிதனா? நல்ல தலைவனா?
நானாக இருந்திருந்தால், அந்த நிலை வந்ததுமே எங்கள் ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று போரை நிறுத்திவிட்டு, என் நெற்றியல் துப்பாக்கியை ஏந்தியிருப்பேன்!
அரசியல் ரீதியாக 30 வருடங்கள் போராடியிருந்தால் இந்நேரம் விடிந்திருக்கும்!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மிக அருமையான கருத்து... அதிலும் குறிப்பாக பிரபாகரனை ஆதரிப்பதைத் தவிர வேறு வழிகள் அனைத்தையும் அவர் அடைத்த தவறை இன்று வரை ஈழத்தமிழர்களும் சில தமிழ்நாட்டு அரை வேக்காட்டு அரசியல்வாதிகளும் உணராமல் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
unmai. en karuthum adhuvae
அருமை! அருமை! உங்களின் பதிலடி சூப்பர்!!!! உங்கழனி கற்பனை அதைவிட சூப்பர்!!!
Post a Comment